search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையெழுத்து இயக்கம்"

    • இந்த கையெழுத்து இயக்கத்தை சித்த மருத்துவப் பேராசிரியர் மாதேஸ் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார்.
    • தொடர்ந்து சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை மரபுப் பொருட்கள் விற்பனை யாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.

    தருமபுரி, 

    தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அதிகாரப்பூர்வமான ஆய்வு களை மேற்கொள்வதற்கு அரசுப் பல்கலைக்கழகம் அவசியம்.

    இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவப் பல்கலைக்கழகம், ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில மருத்து வத்துக்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன.

    ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் முந்தைய- தமிழ் மண்ணின் கலா சாரத்துடன் இணைந்த மூத்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்துக்கு இதுவரை பல்கலைக்கழகம் இல்லை.

    இந்தக் குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடும் செய்து நிலமும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

    ஆனால், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவிற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனால் தமிழர்களின் நீண்டகாலக்கனவு தடைபட்டு நிற்கிறது.

    எனவே, சித்த மருத்துவப்பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் கவர்னர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டு ள்ளது.

    சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டு, மூத்த சித்த மருத்துவரும் உலகத் தமிழ் மருத்துவக் கழகத் தலைவருமான மைக்கேல் செயராசு, எழுத்தாளர் முத்துநாகு, செயல்பாட்டாளர் மணிகண்டன் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாள ர்களாக செயல்படு கின்றனர்.

    இந்தக் குழுவினர் மூலம் தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று தொடங்கியது. தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் இந்த இயக்கம் தொடங்கியது.

    இந்த கையெழுத்து இயக்கத்தை சித்த மருத்துவப் பேராசிரியர் மாதேஸ் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார்.

    தொடர்ந்து சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை மரபுப் பொருட்கள் விற்பனை யாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.

    கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து சந்தையில் மூத்த தமிழர் மருத்தும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இதில் டாக்டர் மாதேஸ் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கையெழுத்து இயக்கம் முடிக்கப்பட்டு அனைத்து கையெ ழுத்துக்கள் கொண்ட அறிக்கை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரி வித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழர் மரபுச் சந்தை மற்றும் தருமபுரி மக்கள் மன்ற நிர்வாகிகள் உமா சங்கர், நிர்மல்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக விவசாயிகளும், பா.ம.க.வும் வலியுறுத்தி வருகிறது.
    • மதுவிலக்கு துறை என்பதை மது விற்பனை துறை என பெயர் மாற்றிக்கொள்ளலாம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்கிற சோழகங்கத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரியலூரில் சோழர் கால பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர் பாசன துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். இதையடுத்து பொன்னேரியை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும், பூங்கா அமைக்கவும் முதல் கட்டமாக ரூ.622 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசன ஏரிகளையும் தூர்வார முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக விவசாயிகளும், பா.ம.க.வும் வலியுறுத்தி வருகிறது. 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதே பா.ம.க. நிலைப்பாடாகும். ஆனால் தடுப்பணைகளுக்கு பதிலாக 10 இடங்களில் மண் குவாரிகளை தமிழக அரசு திறந்துள்ளது.

    ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறிய மு.க.ஸ்டாலின் தற்பொழுது முதலமைச்சராக உள்ள நிலையில் அது குறித்து எந்த நிலைப்பாடும் தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு துறை மது விற்பனையை எவ்வாறு அதிகரிக்கலாம் என பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதனால் மதுவிலக்கு துறை என்பதை மது விற்பனை துறை என பெயர் மாற்றிக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
    • மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்,

    ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பெரியக்கடை வீதி பள்ளிவாசலில் ம.தி.மு.க. 44-வது வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பகுதி செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லட்டு நாசர், சைபுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை நீக்க கோரி பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்துசாமி, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் புத்தரச்சல் பி. கே. மணி சிறப்புரையாற்றினார். கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க., கம்யூனிஸ்டு, வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தமிழ்நாடு மாநில கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பபெறக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தி, வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தென்காசி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செய லாளர் சுதா பாலசுப்பிர மணியன், சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட ம.தி.மு.க. துணைச்செயலாளர் சக்தி கோமதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் மாரிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, ஒன்றிய இணைச்செயலாளர் மணி சேகர், வாசுதேவ நல்லூர் ம.தி.மு.க. செயலா ளர் பாசறை கணேசன், தி.மு.க. செயலாளர் பாலசுப்பிர மணியன், மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு முருகன், வி.சி.க. சுரேஷ், முஸ்லீம் லீக் செய்யது சாகுல் ஹமீது, த.மு.மு.க. ஜமால், ம.தி.மு.க. மெடிக்கல் கருப்பையா, மாரியப்பன், விழி மணி, கோமதிசங்கர், முருகன், சந்திரன், ஆனந்த முருகன், சம்சுதீன், காளிராஜ், ராமநாதபுரம் முருகன், ராயகிரி சங்கையா, ம.தி.மு.க. துணைச்செயலாளர் தர்மர், தி.மு.க. மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆசிரியர் செல்லத்துரை, கட்ட பொம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    • கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரியலூர்,

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில், மதிமுக மாவட்டச் செயலர் க.ராமநாதன், மாநில விவசாய அணிச் செயலர் வாரணவாசி கி.ராஜேந்திரன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை க.சொ.க.கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலர் மு.கோபால், ஏஐடியுசி மாவட்டச் செயலர் தண்டபாணி, வி.சி.க தொகுதி செயலர் மருதவாணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கையெழுத்திட்டனர். கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    • ம.தி.மு.க. சார்பில் கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மாநில மருத்துவர் அணி செயலாளர் வி.எஸ். சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினவேல் குமார் வரவேற்று பேசினாார்.தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முதல் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், தொகுதி செயலாளர் பீர் மைதீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசி முருகன், ராஜகுரு, குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் பொன் ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலபதி, தென்காசி, விருதுநகர் இணையதள மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலெட்சுமி சுப்பையா, இளைஞர் அணி துணைச்செயலாளர் முகமது ஹக்கீம், பூக்கடை பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கத்தினை தொடங்கினர்
    • கையெழுத்து இயக்கத்தினை ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்
    பெரம்பலூர்,


    பெரம்பலூரில் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவில், ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வு.மான சின்னப்பா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜா, முதல் கையெழுத்து இட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த தொடக்க விழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • இதனை மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்ட மன்றத்தின் செயல்பாடுகளுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி வருகிறார்.

    அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவிப் பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி வருகிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    அதனை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து அகற்றக்கோரி கையெழுத்து இயக்க நிகழ்ச்சி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வழிகாட்டுதலின் படி, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆலோச னையின்படி ராமநாதபுரம மாவட்ட ம.தி.மு.க சார்பில் அரண்மனை முன்பு காலை கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை மாவட் செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரகாஷம் தலைமை வகித்தார். மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் குணா, முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக், மாநில இளைஞரணி துணைச்்செயலாளர் கராத்தே பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் வைண்டிங் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.

    இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சரவணன், பாஸ்கரன், பிச்சை சுகநாதன், மங்க ளேசுவரி முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சடாச்சரம், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் ஹக்,நித்தியானந்த்,சத்தியேந்திரன்,மனோகரன்,கெவிக்குமார், சந்திரன், டைசன், குத்புதீன், ஞானப்பிரகாசம், நகரச்செயலாளர்கள் சங்கு துரை (கீழக்கரை).

    பிச்சை மணி (பரமக்குடி), வெள்ளைச்சாமி (ராமேசுவரம்),ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல் (கமுதி),ஜோதி (மண்டபம் மேற்கு), லூக்காஸ் (மண்ட பம் கிழக்கு), உதயசூரியன் (நயினார் கோவில்), உதயக் குமார் (பரமக்குடி), நாக பாண்டி (கமுதி), நாகராஜ் (சாயல்குடி),சிங்கார செல்வம் (திருவாடானை கிழக்கு),வேலுச்சாமி (முதுகுளத்தூர்), பாண்டித்துரை (ராஜசிங்கமங்கலம்).

    பிர்தௌஸ்கான் (ராமநாதபுரம்),ஜெகதீஸ் பாண்டியன் (போகலூர்), இளையராஜா (திருப்புல்லாணி), மாநில தொண்டரணி துணைச் செயலாளர் முனியராஜ், விவசாய அணி துணைச் செயலாளர் முருகேச பாண்டியன், திருப்புல்லாணி செல்வராஜ்,மாணவரணி துணைச்செயலாளர் பாலகணேஷ், நெசவாளர் அணி துணைச்செயலாளர் சீனிவாசன்.

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் எம்.சி வெற்றிவேல், திருவாடானை நூருல் ஹசன்,முதுகுளத்தூர் வழிவிட்டான்,ஒன்றிய பொருளாளர் செய்யது இபுறாம்ஷா,கவியரசன்,சிவசுந்தர்,மாதவன்,முகம்மது அப்துல் ஹக்,வல்லக்குளம் தாஜீதீன், மண்டபம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஜேம்ஸ், உச்சிப்புளி வேலுச் சாமி, தங்கச்சி மடம் ஜோசப் தாஸ்,கமுதி சரத்குமார்,பரமக்குடி பாலகிருஷ்ணன்.

    கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் கோபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின்,பி.ஐ.சி.எம் தாலுகா செயலாளர் செல்வராஜ், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் அண்ணா ரவி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ், எஸ்.டி.பி.ஐ அப்துல் ஜமீல், நஜ்முதீன்,பெரியார் பேரவை நாகேஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான்.
    • பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?

    சென்னை:

    தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, வஞ்சிய தேவன், ஜீவன், கழககுமார் பூங்கா ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.

    ஜூன் 14-ந் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம்.

    ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான்.

    ஆனால் பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?

    மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும். அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக பேசுகிறார்.

    முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்கட்சி தலைவரா?

    கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.

    தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள். கையெழுத்து எல்லோரிடமும் பெற வேண்டும் இது அரசியல் காரணத்திற்கு இல்லை. தமிழ் நாட்டின் நன்மைக்கு என்று சொல்லுங்கள். எங்கெங்கு கையெழுத்து வாங்க முடியுமோ அங்கு எல்லாம் கையெழுத்து வாங்குங்கள், வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் வாங்குங்கள். இது வெற்றி பெரும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். தி.மு.க. தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் பெரியகருப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கையெழுத் திட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர், சிவகங்கை நகராட்சி தலைவர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசுத் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர் தலைமையில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சைல்டு லைன் மேற்பார்வையாளர்கள், மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் சிவகங்கை, காரைக் குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவ னங்களின் உரிமையா ளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து தொண்டி ரோடு, அரண் மனை, நேரு பஜார், தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ் வரி தெரிவித்துள்ளார்.

    • குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    குழந்தை தொழிலா ளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை கூடுதல் தொழிலா ளர் ஆணையர் ஜெயபால் மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆகியோரின் வழி காட்டுதலின்படியும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனு சரிக்கப்பட்டது.

    மதுரை, எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் குழந்தை தொழிலாளரி உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை தொழி லாளர் முறைக்கெதிரான கையெழுத்து இயக்கம். வாகனங்களில் விழிப்பு ணர்வு. ஸ்டிக்கர்கள் ஓட்டு தல், பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் குழந்தை தொழிலாளர் முறைக்கெதிரான வீதி நாடகம் மற்றும். பறை இசை ஆகிய கலை நிகழ்ச்சி கள் சைல்டு லைன் உதவி யுடன் நடத்தப்பட்டது. இதில் மதுரை தொழிலாளர் துணை ஆணையர் லிங்கம், மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன், மதுரை தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மலர்விழி, தொழிலாளர் துணை ஆய்வர்கள், தொழி லாளர் உதவி ஆய்வர்கள். முத்திரை ஆய்வர்கள், மாவட்ட தடுப்பு படை உறுப்பினர்களான சைல்டுலைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கல்வித்துறை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×